En Kanmanithamarai
என் கண்மணித்தாமரை
உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் குறைவு. ஆதலால் தான் உங்கள் எழுத்துக்கு அத்தனை மவுசு. உங்களை முழுமையாய் விமர்சித்து விட முடியாது. தேவையுமில்லை. விமர்சனம் என்னும் பெயரில் அரை வேக்காடாய் எதுவும் செய்யலாம். சரித்திரக் கதை எழுதிய கல்கியையே யாரும் சரியாக விமர்சிக்கவில்லை. நீங்கள் இன்னும் கடினமானவர் என்பது என் கருத்து. எழுதுங்கள் ஐயன். இன்னும் நிறைய எழுதுங்கள் ஐயன். உங்களை ‘ஐயன்’ என்று விளிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இது சாதிக் குறிப்பல்ல. மரியாதையான விளிப்பு மரியாதையும், பிரியமும் கலந்த அழைப்பு.
Reviews
Clear filtersThere are no reviews yet.