Malai Nerathu Mayakkam
மாலை நேரத்து மயக்கம்
வீட்டை விட்டு வெளியே வந்ததும் வேறு ஒரு குளிர் சுற்றிக் கொண்டது. வீட்டுக்குள்ளும் குளிர்தான். ஏ.ஸி. குளிர். பொய் குளிர். ஈரத்துண்டை நெஞ்சில் போர்த்துக்கொள்கிற மாதிரி குளிர். வெளியே விடியற்காலை நாலேகால் மணிக்குத் தோட்டம் முழுவதும் வீசும் காற்றும வேறு விதம். வெகு நாள் பீரோவில் வைத்திருந்த பட்டுப்புடவை உடம்பு முழுக்கப் படும்படி இழுத்துப் போருத்திக் கொள்கிற சுகம். விடியற்காலை குளிர் என்பது அம்மா மாதிரி.
Reviews
There are no reviews yet.