Poongkatru Thirumbuma ?
பூங்காற்று திரும்புமா?
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. மகாலட்சுமி மனோரஞ்சனை நிராகரித்த போது நடந்த அவமானத்தை அவன் ஒரு போதும் மறப்பதாக இல்லை. அது தன்னை மீறி நடந்தது என்று மகாலட்சுமியால் சொல்லக் கூட முடியவில்லை. இத்துணை ஆண்டுகளுக்குப் பின் எப்படியோ திருமணமே நடந்து விட்டாலும் அவனுடைய வெறுப்பு மலையாக வளர்ந்திருக்கிறதே. மகாலட்சுமி என்ன செய்யப் போகிறாள்?
Reviews
Clear filtersThere are no reviews yet.