Vannavilli Parvaiyile
வண்ணவிழிப் பார்வையிலே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுதாகரிக்கு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால், சூழ்நிலை காரணத்தால் இந்தியாவிற்கு விருப்பமில்லாமல் வந்தாள். பதினைந்து ஆண்டுகளாகப் பார்க்காத தந்தையுடன் தான் வசிக்க வேண்டும், அதுவும் ஒரு சிற்றன்னையுடன் என்றால் யாருக்குப் பிடிக்கும். இவ்வளவு துன்பங்களுக்கு நடுவில் இந்தத் தீபன் தொல்லைக் கொடுக்கிறான்.
Reviews
Clear filtersThere are no reviews yet.