அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்
கடவுள் என்பது கடையாணி. மானுட வாழ்வு என்பது முழுத்தேர். ஒரு குறைபாடும் இல்லாத தேர். விரைந்து ஓடுகின்ற தேர். அதனால் கடையாணியை எப்பொழுதுமே கவனித்துக்கொண்டிருப்பார்களா இல்லை. அதே சமயம் கடையாணி இல்லையென்றால் தேர் ஓட்டம் இல்லை. இதைவிட அழகாகக் கடவுள் தத்துவத்தை வேறு எவர் சொல்ல முடியும்? அந்தக் கடவுளை ஆராதித்த மன்னர்கள் பலரின் நெகிழ்ச்சியூட்டும் வரலாறுகளை அழகிய கதைகளாகக் கோர்த்துத் தந்திருக்கிறார் கௌதம நீலாம்பரன். புராணத்தில் பேசப்பட்ட அரசர்களாகட்டும், அல்லது சமீபத்தில் வாழ்ந்த கட்டபொம்மன் போன்ற மன்னர்களாகட்டும்… இவரது கைவண்ணத்தில் மெருகேறி மிகச்சிறந்த பாத்திரங்களாக உருவெடுக்கிறார்கள். நம் தமிழ் மண்ணில் ஆன்மிகம் வளர்த்த அடியார்களாகத் திகழ்ந்த அந்த மன்னர்களுடைய கண்களின் வழியே கடவுளைத் தரிசிக்க இந்த நூல் உதவும்.
Reviews
Clear filtersThere are no reviews yet.