ஸ்ரீமத் பாகவதம்
எத்தனை இடர் வந்தபோதிலும் கண்ணனின் புன்னகை தவழும் முகத்தில் வாட்டம் எட்டிப் பார்த்ததில்லை. அவரது வாழ்க்கையே கொண்டாட்டமாக இருந்ததால், அவர் இன்றும் நம் உள்ளம் கவர் கள்வனாய் வளைய வருகிறார். அதனாலேயே அவரது சரிதம் ஜீவன்களின் பாதையாக சமைந்தது. பரீட்சித்தின் வாயிலாக சுகப்பிரம்ம ரிஷி மனித குலத்திற்கு வழங்கிய பாகவதம் என்கிற மதுரமான தத்துவம், கண்ணன் என்கிற வசீகர விஷயத்தால் எளிமையாக்கப்பட்டு மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. ரிஷிகளின் இந்த வித்தைக்கு சற்றும் குறைவில்லாது ‘தினகரன் ஆன்மிக மலரில்’ பாகவதத்தை தொடராகத் தந்தபோது நமது வாசக அன்பர்கள் பாகவதக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். பாகவதம், தேன் என எத்தனை விதமாய் எத்தனை வசீகரமான வார்த்தைகளால் சொன்னாலும் நிறைவாகாது. ஒரு துளி நாவில் பட்டுவிட்டால் வார்த்தைகளே தேவை இல்லை.
Reviews
Clear filtersThere are no reviews yet.