ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம்
சமையல் என்ற கலையைத் தற்செயலாகக் கற்ற பிறகே மனிதன் நாகரிகத்தை நோக்கிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்தான். சமையலில் பக்குவம் பெற்று, எந்த ஒரு உணவும் தனி ருசியை அடைகிறது. உணவைச் சமையல் பக்குவப்படுத்துவது போலப் பக்தியைப் பக்குவப்படுத்த வந்தவர்கள் மகான்கள். இறைவனை மனிதன் அடையும் பாதையைப் பக்குவப்படுத்தித் தந்தார்கள் இவர்கள். ஆன்மிக அதிர்வு நிரம்பியிருக்கும் தமிழகத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை சரித்திரமே இந்த நூல். முருக வழிபாட்டில் தமிழகத்துக்குப் பெரும் பாரம்பரியம் உண்டு. தமிழர்களின் ஆதி கடவுளாகக் கருதப்படும் முருகன் காட்டிய வழியில் பயணித்து, முருகனையே மூச்சாகக் கருதி வாழ்ந்தவர் பாம்பன் சுவாமிகள். ஒரு பக்தி இயக்கமாகவே திகழ்ந்த அவர், எத்தனையோ அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார்.
Reviews
Clear filtersThere are no reviews yet.