Buddhargalum Mudargalum
புத்தர்களும் மூடர்களும்
உன்னுடைய எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வைக்கவே சில சமயம் நான் உங்களை மூடர்களே என்று அழைக்கிறேன். ஆனால் உடனே மாற்றிக்கொள்கின்றேன். திருத்திக் கொண்டு முரண்பட்டு புத்தர்களே என்கிறேன். இப்படியாக நீங்கள் இவர் தான் அல்லது அவர்தான் என்று நான் அடையாளப்படுத்தி விடுவதைத் தவிர்த்து விடுகிறேன்.
மூடனோடு உன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளலாம் அல்லவா? நீ மூடனல்ல. புத்தனாகும் சாத்தியமுள்ள ஜீவன். வளர வேண்டியிருக்கிறது. உன்னுடைய அகத்தின் அடி ஆழத்தில் நீ யாராக இருக்கிறாயோ அதுவாக நீ ஆகிப்போக வேண்டியிருக்கிறது. உன்னுடைய மையம்தான் புத்தர். உன்னுடைய வெளிவட்டம் மூடன்.
நான் இருவருக்குமாகப் பேச வேண்டி இருக்கிறது. மூடனைப் போகச் சொல்ல வேண்டி இருக்கிறது. புத்தரை வரவழைக்க வேண்டி இருக்கிறது. எனவே நான் மூடர்களே என்று அழைக்கும்போது நொந்து விடாதீர்கள்.
புத்தர்களே என்று சொல்லும்போது பூரித்து விடாதீர்கள்.”
Reviews
Clear filtersThere are no reviews yet.