Kaase Kadavul
காசே கடவுள்
இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர் சிலர். அந்தச் சிலருள் ஒருவராகத் திகழ்ந்தவர் ‘ஜாவர்’ சீதாராமன் அவர்கள். அவர் நமக்கு அளித்துச் சென்ற கதைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் அந்த ஒரு சில நாவல்கள் நம்மீடையே மறக்காமல், மறையாமல் இன்றும் நிலவி வருகிறது.
அதற்குக் காரணம் அந்தக் கதையின் தரம்தான். எவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் பக்கத்திற்குப் பக்கம், ஏன் வரிகளுக்கு வரி விறுவிறுப்பைத் தருகிறது. இப்படிப்பட்ட கதைகளை ஒரு சிலரால்தான் எழுத முடியும்.
இவை காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் எனலாம். இந்த அருமையான நூல்களை எங்கள் மூலம் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்த அனைவருக்கும் நாங்கள் வாசகர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Reviews
Clear filtersThere are no reviews yet.