Maya Nilavu
மாய நிலவு
அழகிய இந்தத் தலைப்பை இந்த நாவலுக்குச் சூட்டி யவர் தேவி ஆசிரியர் திரு. இராமசந்திர ஆதித்தன் அவர்கள். ஒரு விறுவிறுப்பான தொடர் எழுதும்படி ‘தேவி’ இதழ் எனக்குச் சந்தர்ப்பம் அளித்தபோது நான் அதில் எழுதிய ஒரு மகத்தான நாவல் இது. ‘நல்ல நாவல்’ ‘மிக நல்ல நாவல்’ – என்கிற பதங்களுக்கு இந்த நாவல் உட்படுகிறதோ இல்லையோ ‘வித்யாசமான நாவல்’, ‘விறு விறுப்பான நாவல்’ என்கிற பதத்துக்கு இது உட்பட்ட நாவல் என்பதை இதற்குக் கிடைத்த வாசகர் வரவேற்பு ஊர்ஜிதப் படுத்தியது. அது மட்டுமல்ல…. உடனேயே இந்த நாவல் நிறைவு பெற்ற அதே இதழி லேயே, என்னுடைய அடுத்த தொடரான ‘காற்று… காற்று… உயிருக்கு’ இடமளித்த ஒரு தொடராகவும் இது அமைந்து விட்டது. அந்த அளவு வாசக வரவேற்பு இதற்கு இருந்தது.
இன்று நாவல் எழுத எவ்வளவோ விஷயங்கள். ‘சமூகம் – சரித்திரம் – க்ரைம் – காதல்’ என்று அந்த விஷயங்களில் இறங்கி முத்துக் குளிக்கும் எழுத்தாளர்களும் இன்று மிக அதிகம். எவரும் எவருக்கும் சளைக்காதவர்கள்.
Reviews
Clear filtersThere are no reviews yet.