Mayamellam Nanariven
மாயமெல்லாம் நானறிவேன்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. “உங்கள் மனைவியிடம் உண்மையை நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் சொல்லி விடுவேன்” என்று ஒரு பேரழகி புதிதாய்த் திருமணமான தங்கையின் கணவரிடம் மிரட்டிக் கொண்டிருந்ததைக் கேட்ட யுகேந்திரனால் தாங்க முடியவில்லை! தங்கையைக் காப்பாற்ற அவன் சுப்ரியாவை நெருங்கினான்.ஆனால், இப்போது ஆபத்து அவனுக்குத்தான்.
Reviews
Clear filtersThere are no reviews yet.