Tamizhaga Arasial Katchigal
தமிழக அரசியல் கட்சிகள்
இந்த நூல் தமிழக அரசியல் கட்சிகள், சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
உலகில் தமிழ் நாட்டில் மட்டுமே தமிழ், மாநில மொழியாக பேசப்படுகிறது. அதிலும் மிகச் சிறப்பு வாய்ந்த ‘தூய மெட்ராஸ் தமிள்’ நம் சென்னைவாசிகளுக்கே சொந்தம். அந்தச் சிறப்பு வாய்ந்த இனிய தமிலில் இப்புத்தகத்தை ஆரம்பித்த விதம் ‘சோ’க்காக இருக்கிறது. சோ அவர்களின் நையாண்டியும், நகைச்சுவையும் நிரம்பிய இப்புத்தகம் படிப்போரின் சிந்தனையையும் தூண்டும் விதமாக உள்ளது.
இ.காங்கிரஸையும், இந்து மதத்தையும் ஒப்பிட்ட இடம் வெகு ஜோர். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி, இந்தியாவிலே மிகவும் பழமை வாய்ந்த கட்சி, செல்வாக்கு மிகுந்த கட்சியான காங்கிரஸ் இன்று வெறும் பெருங்காய டப்பாவாக ஆனது ஏன், எப்படி, எவரால் என சோ அவர்கள் அலசி, நுணுக்கமாக ஆராய்ந்த விதம் அபாரம்.
நம் தமிழ்நாட்டில், இரு மாநில கட்சிகளைத் தவிர வேறு தனி நபர் கட்சியோ, கூட்டணி கட்சியோ, தேசிய கட்சியோ ஆட்சிக்கு வருவதற்கில்லை என்ற சாபக்கேடு. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல இவ்விரு கட்சிகளுக்கிடையே அகப்பட்டு நசுங்கி, முழி பிதுக்கும் நம்மைக் கண்டு நமக்கே பரிதாபம். இதில், தான் தேர்தலில் ஓட்டளித்த வெற்றி பெறச் செய்த கட்சிக்கு, அவர்களின் அராஜகங்களுக்கு சால்ஜாப் அளித்து சுய கௌரவத்தை காப்பாற்ற முயலும் ஏமாளி ஒட்டாளர்கள்; அவர்களை விட இவர்கள் தேவலை என (வீண்) ஆறுதல் அடையும் அல்ப சந்தோஷிகள்; ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன, என்று நினைக்கும் விட்டேத்திகள். ஆக மொத்தம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நம் மக்களுக்கு மீறுவது ஏமாற்றமும், விரக்தியும்தான்.
ஆனால் ஒன்று, இதிலிருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டோம். ‘தன் கையே தனக்குதவி’. தன் கடும் பயிற்சியால் கல்வி அறிவு பெற்று, தன் முயற்சியால் ஒரு வேலையை சம்பாதித்தால், நம்மிடம் இருந்து வரி என்ற பெயரில் அதில் பாதிக்கு மேல் அரசு வசூலிக்கும். அதையே ஏழைகளுக்கு இனாம் என்ற பெயரில் வழங்கி தனக்கு நற்பெயரும், விளம்பரமும் பெறும். இதனால் ஒரு சோம்பேறி தலைமுறையை வளர்த்தாலும் பரவாயில்லை.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக இரு மாநில கழகங்களே மாறி, மாறி தமிழகத்தை ஆண்டு வருகிறது. வேறு மாற்று ஆட்சி இல்லையே என நாம் ஏங்கிய போது வந்ததே ஒரு நல்ல மாற்றம். நம் ‘புரட்சித் தலைவி’ நமக்கு ‘அம்மா’வாக மாறியது ஒரு நல்ல மாற்றமே. இன்றைய அரசியல் சூழ்நிலையில், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நிலையான அரசும்; கலவரங்கள், ஆர்ப்பாட்டங்கள் இல்லாத அமைதியான வாழ்க்கையும்; மக்களின் அத்யாவஸ்ய தேவையை உணர்ந்து செய்யும் பல நல்ல திட்டங்கள் என நிறைவான நல்லாட்சியை வழங்கும் நம் முதல்வருக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம். நம் முதல்வர்க்கும், நம் எல்லோருக்கும் நல்லாசிகள் வழங்க இறைவனை கோருவோமாக.
– அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன்.
01.தமிழ்நாடு பால்டிக்ஸே கலக்கல்தான்!;
02.கட்சிகளின் கனவுகளும், கணக்குகளும்;
03.தமிழகத்தின் ஆட்சியும், அரசியலும்;
04.முதல்வரின் இன்றைய பலம் இதுதான்;
05.காங்கிரஸுக்கு ஒரு கடமை இருக்கிறது;
06.காங்கிரஸுக்கு ஏன் இந்த கதி?;
07.காங்கிரஸுக்கு ஏன் இந்த கதி 2?;
08.முதல்வர் கருணாநிதி – ஒரு பார்வை.
Reviews
Clear filtersThere are no reviews yet.